வாழ்க்கை கவிதை துளிகள்
![]() |
பென்சில் |
பென்சில்
கற்றுக்கொடுப்பது
வாழ்க்கையில்
ஒன்று தான்..!!
📌கூர்மையாக இரு
இல்லையென்றால் சீவி விடுவார்கள்
வாழ்க்கை என்னும்
வரைபடத்தில்
*சந்தோஷம் என்னும் நதியை
தொலைத்து…
😔😔கவலை என்னும் தீவில்… கரை ஒதுங்கி நிற்கிறேன்…
🚶♀🚶♀ஒரு தனி மரமாக…
சகுனிகள் நிறைந்த உலகில்
” சத்தியத்தை”
மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது …
கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன்,,
இருப்பதே நல்லது…..!!
நல்ல உறவு என்பது
கடிகார முள்ளை போன்றது…
அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை
என்றாலும்,
எப்பொழுதும்
தொடர்பிலேயே இருக்கும்…
வாழ்வில் நாம் முன்னேற வேண்டுமென்றால்….
நாம் விட்டுச் செல்ல வேண்டியது கால் தடங்களை மட்டுமல்ல
ஏளனம், எதிர்பார்ப்பு, அவமானம்,
சில துரோகங்களையும் தான்…!
சில சுவடுகள் மனதில் வடுக்களாக இருந்தால் தான்…
வாழ்வில் நமக்கு சாதிக்கும் வல்லமை வருகிறது..
இன்று நீ நீட்டிய கையை பிடிக்க ஒருவர் இல்லாமல் இருக்கலாம்….
ஆனால் உன் முயற்சியில் எழுந்து நிற்கும் போது எத்தனையோ கைகள் உனக்காக தட்ட காத்து கிடக்கிறது…..💯💯💯
Post Comment